மூலவர்: ஷீரடி சாய் பாபா
தந்தை: ஸ்ரீ காசி விஸ்வநாதர்
தாய்: ஸ்ரீ காளியம்மன்
ஷீரடி சாய் பாபா மலைக்கோவில் வரலாற்று சிறப்புகளும் மகிமைகளும்!
ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் (அரசு பதிவு எண்: 62 of 2019.) துறவி கருணாநிதி சுவாமிகள் சிந்தனையில் உருவானது. இந்திய துறவியான ஷீரடி சாய்பாபா கோயில் கட்டுவதற்கான உத்வேகம் வந்தது. எனவே, தனது சாய் அப்பா மீது ஒரு மகன் துறவி கருணாநிதி கொண்டிருந்த நீடித்த நட்பின் கதையை தொடங்கியது.
தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான ஷீரடி சாய் பாபா மலை கோயில் ஷீரடி சாய் பாபா சன்ஸ்தான் டிரஸ்டின் முதல் திட்டமாகும். இது இந்தியாவின் அறக்கட்டளைகள் பதிவு சட்டம் 1882 ன் கீழ் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற இந்து மத அமைப்பாகும். ஆன்மிக பக்தன் திருமதி வசந்த பாண்டி மகன் துறவி கருணாநிதி சுவாமிகளால் இரண்டு ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டது.
இந்த புகழ்பெற்ற கோயில் நான்கு தினசரி பூஜைகள் நடைபெறுகிறது.
மதுரை, மேலக்குயில்குடி மலையின் உச்சியில் ஷீரடி சாய் பாபா மலை கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மூலையில் சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.
ஷீரடி சாய் பாபா பாகுபாடின்றி அனைவருக்கும்
அருள்பாலிப்பதால் தான் இப்ப புனிதத் தலத்தில் யாதொரு வேண்டுதல் செய்தாலும் தடைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவர். நோய்வாய்ப்பட்டவர்கள் சில நாட்கள் இங்கு தங்கினால் தீராத நோய்களை நீக்கும். இந்த மலைக் கோயிலுக்கு புனித தரிசனம் செய்வதன் மூலம் மனஉளைச்சல் மற்றும் கவலைகள் குறையும்.
ஒவ்வொரு வியாழக்கிழமை புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இங்கு பிரசாதமாக மதிய அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலின் முக்கிய திருவிழாவாக ராமநவமி, குரு பூர்ணிமா மற்றும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கோயிலில் வணங்கும் போது ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது.
பிரதோஷம் நாட்களில் இங்குள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் நந்தி தேவரை வழிபட, கர்ம வினைகளை நீக்கி நற்பலன்களைத் தரும்.
அமாவாசை நாட்களில் இங்குள்ள ஸ்ரீ காளியம்மன் உக்கிரமான, காக்கும் கடவுள் வடிவம் அவர். 'காளி' என்றால் 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள், இவர் காலத்தைக் கடந்து நிற்பவர். பில்லி, சூனியம், ஏவல் தீயவற்றை அழித்து, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஏற்படும் தீங்குகளை நீக்கி, எதிரிகளை அதிரடியாக அழிப்பவர் பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கும் பிள்ளைகள் கிடைக்கும், கடன் தொல்லை இருப்பவர்கள் அதில் இருந்து விடுபடுவர் என்பது முன்னோர் வாக்கு உள்ளது.
மலை உச்சியில் உள்ள வேப்பிலை கசப்பு தன்மை இல்லாமல் கறிவேப்பிலையின் சுவையுடன் இருப்பது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு.
கோவில் மலை உச்சியில் நின்று பார்க்கும்போது மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த அழகையும் (மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் யானைமலை ஒத்தக்கடை.) நாம் கண்டு ரசிக்கலாம்.
ஷீரடி சாய் பாபா மலை கோயில்
எண்.2/77-2, ஆதி சிவன் நகர்,
மேலக்குயில்குடி,
மதுரை - 625 019.
தமிழ்நாடு, இந்தியா

Introduction

Wonderful Carnation

Origin of Shri Sai Baba

Greatness of Sai Baba Udi

Shri Sai Baba’s Advice

Our Mission and Values
During Weddings, Birthdays and Special Occasions, make a sacred offering of food, which will provide sustenance for worshippers in the Shri Saibaba Sansthan Trust.
In honor of your ancestors, make a sacred offering of food, which will provide sustenance for worshippers in the Shri Saibaba Sansthan Trust.

